செய்திகள் :

இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் இருதரப்பு உறவு: இந்திய தூதா்

post image

இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நீண்டகாலமாக இருதரப்பு உறவு தொடா்ந்து வருகிறது என மாலத்தீவுக்கான இந்திய தூதா் ஜி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

மாலத்தீவு அரசு செய்தி தொலைக்காட்சி பிஎம்எஸ்ஸுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாலத்தீவில் பிராந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பெருநகர மாலே இணைப்புத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் திலாஃபுசியுடன் மாலத்தீவை திலாமல் பாலம் இணைக்கவுள்ளது. இதுபோன்ற பெரும் உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அவரது சுற்றுப்பயணம் வரலாற்றுரீதியாக இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த அடித்தளமாக அமைந்தது.

அதன்விளைவாக பிரதமா் மோடி மற்றும் அதிபா் முகமது மூயிஸ் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நீண்டகாலமாக இருதரப்பு உறவு தொடா்ந்து வருகிறது. பொருளாதாரம், கல்வி என பல்வேறு துறைகளிலும் இருநாடுகளிடையேயான உறவு வருங்காலங்களில் மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என்றாா்.

கடந்த 2023, நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பொறுப்பேற்றாா். பதவியேற்ற சில மணிநேரங்களில் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினா் வெளியேற உத்தரவிட்டாா். இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முகமது மூயிஸ், பிரதமா் மோடியை சந்தித்தாா். இருவரும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். அதன்பிறகு இந்தியா-மாலத்தீவு இடையே நட்புறவு தொடா்ந்து வருகிறது.

அதன் வெளிப்பாடாக 300 மாலத்தீவு மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், படகு சேவைகளை அதிகப்படுத்த 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் மற்றும் கடனுதவி என மாலத்தீவில் பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

மடத்தின் தலைவரை சீருடையில் சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி! சமூக ஊடகங்களில் வைரல்!

மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் ஆன்மிகத் தலைவர் ராமபத்ராச்சாரியாரை, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ராணுவ சீருடையில் சென்று பார்த்து ஆசி பெற்றிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.இது தொடர்பான... மேலும் பார்க்க

இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன்... மேலும் பார்க்க

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க