செய்திகள் :

``இந்தியா மூன்றாம் நாட்டின் தலையீட்டை மறுக்கிறது என்று ரூபியோ சொன்னார்'' - பாக். போட்டு உடைத்த உண்மை

post image

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது.

இதை எதிர்த்து, இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ நடத்தியது.

இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த, இரு நாடுகளுக்கு இடையேயும் தாக்குதல்கள் மாறி மாறி நடந்துகொண்டிருந்தன.

அதன் பின், இரு நாடுகளுக்கு இடையேயும் மே 10-ம் தேதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

மார்க் ரூபியோ
மார்க் ரூபியோ

பாகிஸ்தான் துணைப் பிரதமர் பேட்டி

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடப்பது குறித்தும், அதை மற்ற நாடுகள் நடத்துவது குறித்தும் நேர்காணல் ஒன்றில், பாகிஸ்தான் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார் நேற்று பேசியுள்ளார்.

"எங்களுக்குப் பேச்சுவார்த்தையில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தியா தான், இது இருநாடுகளுக்கான பிரச்னை என்று பிற நாட்டினரின் தலையீட்டை மறுக்கிறது.

எங்களுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை விரிவானதாக இருக்க வேண்டும்.

அந்தப் பேச்சுவார்த்தையில் தீவிரவாதம், ஜம்மு & காஷ்மீர் என அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

மார்க் ரூபியோ சொன்னது என்ன?

கடந்த மே 10-ம் தேதி, போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்க் ரூபியோ மூலம் எனக்கு வந்தபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சுதந்திரமான ஏதோ ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்டது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

பின்னர், நான் ஜூலை 25-ம் தேதி, வாஷிங்டனில் ரூபியோவை சந்தித்தபோது, பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டேன்.

அதற்கு அவர், 'இந்தியா, இது எங்கள் இருதரப்பினருக்கான பிரச்னை என்று மறுத்துவிட்டது' என்று பதிலளித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை கூறிவிட்டார். ஆனால், இஷாக் தாரின் பதில், இந்தியா மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

இபிஎஸ் டெல்லி பயணம்: "மகாராஷ்டிராவைப் போல் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கிறது" - மாணிக்கம் தாகூர் MP

பா.ஜ.க-வின் வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தை எம்.பி. மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, செங்கல்லை ஓரம் கட... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையம்: பெயர் சூட்டும் அறிவிப்பால் சர்ச்சை கிளப்பினாரா இபிஎஸ்? தலைவர்கள் சொல்வது என்ன?

"முத்துராமலிங்க தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயரைச் சூட்டவும் நடவடிக்கை எடுப்போம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்ட பிரசார பய... மேலும் பார்க்க

Canada: ``இந்திய தூதரகத்தை முற்றுகையிடுகிறோம்; இங்கே வராதீர்கள்'' - காலிஸ்தான் ஆதரவாளர்கள்

2023-ம் ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசலை உண்டாக்கியது, பெரிதாக்கியது. அவரது கொலைக்கு இந்தியாவே காரணம் என்று கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ர... மேலும் பார்க்க

``2026 தேர்தலுக்கு பிறகு பழனிசாமி நடுரோட்டில் நிற்கப்போகிறார்'' - டிடிவி தினகரன் காட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மற... மேலும் பார்க்க

``சமூக அநீதிகளுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்'' - தந்தை பெரியார் குறித்து பினராயி விஜயன்

தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் எனச் சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளி... மேலும் பார்க்க

ADMK: `உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த காரணம்' - எடப்பாடி பழனிசாமியின் பதிவு வைரல்!

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதை சகித்துக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அப்போதே, கட்சிப் பொறுப்ப... மேலும் பார்க்க