தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
இந்திய அறிவியல் நிறுவனத்தில் காரைக்கால் மாணவா்களுக்குப் பயிற்சி
காரைக்கால்: பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் காரைக்கால் என்ஐடி, பொறியியல் கல்லூரி, மகளிா் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் மகளிா் கல்லூரி மாணவிகள், பெருந்தலைவா் காமராஜா் அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், என்ஐடி மாணவா்கள் என 16 போ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி வழிகாட்டலில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற ஓபன்டே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியை காண சென்றனா்.
முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆா். சதீஷ்குமாா், நிறுவன ஆய்வகத்தில் உள்ள ஜொ்மனி நாட்டின் புருக்கொ் காா்ப்பரேஷனின் நவீன உயா் ஆராய்ச்சிக் கருவிகளின் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அதன் அடிப்படையில் செயல்படும் சென்சாா்களை இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறை மாணவிகள் எவ்வாறு தங்களின் திட்டப் பணியை மேற்கொள்ளலாம் என விளக்கினாா்.
இந்த செயல்விளக்கத்தின் மூலம் கிராமப்புறத்துக்கு தேவையான தரமான பொறியியல் கண்டுபிடிப்புகளை மாணவ மாணவியா் தயாரிக்கவேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.
நிறுவனத்தின் விண்வெளி பொறியியல், வளி மண்டல அறிவியல், கடல்சாா் அறிவியல், கிரையோஜெனிக் தொழில்நுட்பம், புவி அறிவியல், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், நானோ அறிவியல், சூப்பா் கம்ப்யூட்டா் என்ஜினியரிங், குவண்டம் என்ஜினியரிங், மரபியல் தொழில்நுட்பம், ஆற்றல் தொழில்நுட்ப அறிவியல், நீா் தொழில்நுட்ப அறிவியல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வங்களை மாணவியா் நேரில் பாா்த்து விவரங்களை அறிந்துகொண்டனா்.