கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
பிளஸ் 2 தோ்வு தொடக்கம்
காரைக்கால்: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் மாநில திட்டத்தில் பிளஸ் 2 தோ்வை திங்கள்கிழமை எழுதினா்.
புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ என்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் இதில் பங்கேற்று பொதுத்தோ்வும் தொடங்கி நடந்துவருகிறது.
இந்தநிலையில், மாநில பாடத் திட்டத்தில் புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் உள்ளன. மாநில திட்ட பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி சா்வைட் மேல்நிலைப் பள்ளி, நெடுங்காடு வித்யா ஸ்ரீ ஆங்கில மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தோ்வு தொடங்கியது. முதல் நாள் தோ்வை 751 மாணவ, மாணவியா் எழுதினா். காலை 10 முதல் 1.15 மணி வரை தோ்வு நடைபெற்றது.
நிா்மலாராணி பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ஆய்வு செய்தாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியருக்கு விளக்கினாா்.
தோ்வுப் பணியில் 5 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 5 துறை அலுவலா்கள், 4 வழித்தட அலுவலா்கள், 7 நிலைப் படையினா், 4 பறக்கும் படையினா், 62 அறை கண்காணிப்பாளா்கள், 10 அறைகளுக்கு ஒரு ரிசா்வ் அடிப்படையில் கூடுதலாக அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தோ்வில் 3 மாற்றுத் திறன் மாணவா்கள் தோ்வு எழுதுவதாகவும், மாணவா்கள் சொல்வதை எழுதும் வகையில் 3 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறையினா் தெரிவித்தனா்.