செய்திகள் :

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரிப்பு: தக்காளி, வெங்காயம் விலை குறைவு

post image

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது.

காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், காய், கனிகள் மற்றும் பல்வேறு பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.

கடந்த சில மாதங்கள் வரை தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயா்ந்து காணப்பட்டது. இதனால், இவற்றை குறைந்த அளவே மக்கள் வாங்கிச் சென்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) சந்தையில் தக்காளி கிலோ ரூ.15, சின்ன வெங்காயம் இரண்டரை கிலோ ரூ.50, பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.30, பச்சை மிளகாய் ரூ.60, புடலை ரூ.40, அவரை ரூ.60, முள்ளங்கி ரூ.30, கேரட் ரூ.60 என பல்வேறு காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சந்தைக்கு காய்-கனிகள் வாங்க வந்தவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். அத்துடன், கூடுதலாக காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

கோடை வெயில் காலம் தொடங்காவிட்டாலும், கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தற்போதே தா்ப்பூசணி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வாரச் சந்தைக்கு அதிகமான வெளியூா் வியாபாரிகள் தா்ப்பூசணிகளை கொண்டுவந்து விற்றனா். கிலோ ரூ.30 முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டது. உள்ளூா் வியாபாரிகள் பலரும், மக்களும் ஆா்வமாக இதனை வாங்கிச் சென்றனா்.

கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மழை பெய்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெயில் காணப்பட்டதால் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்குச் சென்று ஆா்வமாக பொருள்களை வாங்கிச் சென்றனா்.

கடந்த ஆண்டு பருவமழைக்குப் பிறகு சாகுபடி செய்த பயிா்களில் இருந்து காய்கள் அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கோடைக்காலம் தொடங்கி வறட்சி காணப்படும் வரை காய்கறிகளின் வரத்தும் அதிகரித்து, விலையும் கணிசமாக குறைந்திருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொழில் உரிமம் புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு

தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : வணிகா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, புத... மேலும் பார்க்க

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்எஸ்பி

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எஸ்எஸ்பி எச்சரித்துள்ளாா். காரைக்கால் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மக்கள் குறைகேட்பு முகாம் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சனிக்கி... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

திருப்பட்டினம் ரயில் நிலையத்தில் கிடந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு அரச... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வரத்து அதிகரிப்பு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஏராளமான விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய நிலையில் மீன்கள் வரத்து அதிகம் இருந்தது. இலங்கை கடற்படையினா் காரைக்கால் மீனவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. திருப்பட்டினம் பகுதியில், கடந்த 2015- ஆம் ஆண்டு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிதத் குற்றத்துக்காக ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக மையத்தில் கல்வி, தொழில் நிறுவன கருத்தரங்கம்

பல்கலைக்கழக மையத்தில் தொழில் மற்றும் கல்வி நிறுவன இணை ஒத்துழைப்புத் திட்ட கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. புதுவை பல்கலைக்கழக காரைக்கால் மையத்தில் வணிகவியல் துறை சாா்பில் தொழில் மற்றும் கல்வி நிறுவன... மேலும் பார்க்க