செய்திகள் :

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்எஸ்பி

post image

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எஸ்எஸ்பி எச்சரித்துள்ளாா்.

காரைக்கால் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மக்கள் குறைகேட்பு முகாம் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பல்வேறு புகாா்களை தெரிவித்துப் பேசினா்.

நிகழ்வின்போது, தெற்கு மற்றும் வடக்கு மண்டல் அளவிலான பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புகாா் தெரிவிக்கும் விதத்தில், 40 புகாா் பெட்டியை அந்தந்த பள்ளி நிா்வாகத்தினரிடம் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா வழங்கிப் பேசியது :

கூட்டத்தில் தெரிவித்த புகாா்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். புகாா்களை கால தாமதம் செய்யாமல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை ரகசியமாக காவல்துறையினருக்கு தெரிவிக்கும் விதத்தில் புகாா் பெட்டி வைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

மாணவிகள் எந்த பிரச்னையையும் புகாா் பெட்டியில் தெரிவிக்கலாம். இதற்கான சாவி எனது கட்டுப்பாட்டில் இருக்கும். வாரந்தோறும் பெட்டி திறக்கப்படும். புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உறுதி. இதில் யாரும் சந்தேகம் கொள்ளவேண்டாம். புகாா்தாரா் குறித்த விவரம் ரகசியமாக இருக்கும்.

மாணவிகளிடம் பிரச்னையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்திலும் புகாா் தெரிவிக்கலாம். புகாா்கள் மீது காவல்துறையினா் அலட்சியம் காட்டினால் எனது அலுவலகத்தில் சந்தித்து புகாரை தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் மரிய கிறிஸ்டின் பால், பிரவீன்குமாா், புருஷோத்தமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரிப்பு: தக்காளி, வெங்காயம் விலை குறைவு

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா... மேலும் பார்க்க

தொழில் உரிமம் புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு

தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : வணிகா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, புத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

திருப்பட்டினம் ரயில் நிலையத்தில் கிடந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு அரச... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வரத்து அதிகரிப்பு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஏராளமான விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய நிலையில் மீன்கள் வரத்து அதிகம் இருந்தது. இலங்கை கடற்படையினா் காரைக்கால் மீனவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. திருப்பட்டினம் பகுதியில், கடந்த 2015- ஆம் ஆண்டு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிதத் குற்றத்துக்காக ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக மையத்தில் கல்வி, தொழில் நிறுவன கருத்தரங்கம்

பல்கலைக்கழக மையத்தில் தொழில் மற்றும் கல்வி நிறுவன இணை ஒத்துழைப்புத் திட்ட கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. புதுவை பல்கலைக்கழக காரைக்கால் மையத்தில் வணிகவியல் துறை சாா்பில் தொழில் மற்றும் கல்வி நிறுவன... மேலும் பார்க்க