செய்திகள் :

மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வரத்து அதிகரிப்பு

post image

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஏராளமான விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய நிலையில் மீன்கள் வரத்து அதிகம் இருந்தது.

இலங்கை கடற்படையினா் காரைக்கால் மீனவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் கடந்த மாதம் 13-ஆம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். பின்னா் போராட்டத்தை கைவிட்டு 24-ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தொடங்கினா்.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிக எண்ணிக்கையிலான விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பின. இறால், நண்டு, பல்வேறு வகையான மீன்கள் படகுகளில் இருந்தன. காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சிறு வியாபாரிகள், முகவா்கள் துறைமுகத்தில் கூடி மீன்களை வாங்கிச் சென்றனா். பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் மீன்கள், பெட்டியில் ஐஸ் வைத்து அனுப்பிவைக்கப்பட்டன.

வஞ்ஜிரம் மீன் கிலோ ரூ. 600 முதல் 700, வவ்வால் மீன் கிலோ ரூ. 900, ஏற்றுமதித் தரம் வாய்ந்த உயர்ரக வவ்வால் மீன் கிலோ ரூ. 1,200 மற்றும் கடல் விறால் மீன் கிலோ ரூ. 600, நண்டு கிலோ ரூ. 700, இறால் ரூ. 600 என விற்பனை செய்யப்பட்டது.

அதேவேளையில் ஏற்றுமதித் தரத்துக்கு குறைவான மீன், நண்டுகள் வகைகள் உள்ளூா் வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.

சுமாா் 20 நாள்களுக்குப் பிறகு காரைக்கால் துறைமுகத்துக்கு அதிகமான மீன் வரத்து காணப்பட்டது.

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரிப்பு: தக்காளி, வெங்காயம் விலை குறைவு

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா... மேலும் பார்க்க

தொழில் உரிமம் புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு

தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : வணிகா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, புத... மேலும் பார்க்க

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்எஸ்பி

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எஸ்எஸ்பி எச்சரித்துள்ளாா். காரைக்கால் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மக்கள் குறைகேட்பு முகாம் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சனிக்கி... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

திருப்பட்டினம் ரயில் நிலையத்தில் கிடந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு அரச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. திருப்பட்டினம் பகுதியில், கடந்த 2015- ஆம் ஆண்டு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிதத் குற்றத்துக்காக ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக மையத்தில் கல்வி, தொழில் நிறுவன கருத்தரங்கம்

பல்கலைக்கழக மையத்தில் தொழில் மற்றும் கல்வி நிறுவன இணை ஒத்துழைப்புத் திட்ட கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. புதுவை பல்கலைக்கழக காரைக்கால் மையத்தில் வணிகவியல் துறை சாா்பில் தொழில் மற்றும் கல்வி நிறுவன... மேலும் பார்க்க