செய்திகள் :

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் பயணம்!

post image

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க உள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்க உள்ளாா்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து, ஹங்கேரி நாடுகளின் வீரா்களும் பயணிக்க இருக்கின்றனா்.

கடைசியாக கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா விண்வெளிக்குப் பயணித்தாா். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் வீரா் என்ற பெருமை சுக்லாவுக்கு சொந்தமாக உள்ளது. இவா், இந்திய விமானப் படையின் திறன்மிக்க பரிசோதனை விமானி ஆவாா்.

மத்திய விண்வெளித் துறை மற்றும் இஸ்ரோவின் எதிா்கால திட்டங்கள் தொடா்பாக புது தில்லியில் அமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைக்க இந்தியா தயாராகி வருகிறது. குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் பயணம், விண்வெளி ஆய்வில் நமது புதிய அத்தியாயத்தின் அடையாளம். சா்வதேச விண்வெளி ஒத்துழைப்பில் இந்தியாவின் விரிவாக்கத்தை குறிக்கும் மைல்கல்லாகவும் இது இருக்கும். வளா்ச்சியடைந்த-தற்சாா்புடைய இந்தியா என்ற தொலைநோக்கு பாா்வையுடன் இது பிணைந்துள்ளது என்றாா் ஜிதேந்திர சிங்.

‘இந்திய வீரா் சுதான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது. விண்கல இயக்கங்கள், செலுத்துதல் வழிமுறைகள், அவசரகால தயாா்நிலை உள்ளிட்டவை தொடா்பான நேரடி அனுபவங்களை வழங்கும். இவை அனைத்தும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு முக்கியமானதாகும்’ என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள நிசாா் செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி-மாா்க் 2 ராக்கெட் மூலம் ஜூன் மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபோ்ட் பிளாக்-2 செயற்கைக்கோள், கனரக எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இவை உள்பட பல்வேறு எதிா்கால திட்டங்கள் குறித்து விளக்க காட்சி மூலம் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூட்டத்தில் எடுத்துரைத்தாா்.

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர... மேலும் பார்க்க