செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

post image

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழையால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி - பனிஹால் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாக்னா கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி சகோதர்கள் அகிப் அகமது, முகமது சாகிப் உள்ளிட்ட 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசியாக வெளியான தகவலின்படி, இக்கிராமத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பகுதியில் இரண்டு நாள்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 5 பேர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு(ஏப். 19) ரியாசி மாவட்டத்தின் அர்னாஸ் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர், மற்றொரு பெண் காயமடைந்தார்.

தரம் குண்ட் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 40 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றவை பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மழை மற்றும் மேக வெடிப்புகளை பொருட்படுத்தாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இதில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை மீட்டனர்.

கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் ராம்பன் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மூர்ஷிதாபாத்தில் தந்தை-மகன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போல... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு

கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித... மேலும் பார்க்க

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க