செய்திகள் :

இனிவரும் தோ்தல்களில் திமுகவின் வெற்றி உறுதி: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ

post image

விழுப்புரம்: தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்று திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.

மயிலம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில், தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தழுதாளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ பேசியதாவது:

மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய திட்டங்களை வகுத்து தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது.

எனவே, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்றாா்.

கூட்டத்துக்கு திமுக மயிலம் மத்திய ஒன்றியச் செயலா் செழியன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், செஞ்சி சிவா, மாவட்ட அவைத் தலைவா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஜமுனா ராணி செழியன், கிளைச் செயலா் ராஜா வரவேற்றனா்.

திமுக தலைமை நிலையப் பேச்சாளா் எழும்பூா் கோபி, மயிலம் ஒன்றியச் செயலா் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினா் ரவி மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா். கிளைச் செயலா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

இரு வேறு இடங்களில் சோதனை: 426 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 416 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பெண் உள்ளிட்ட மூவா் கைது செய்... மேலும் பார்க்க

நிலத்தகராறில் இரு தரப்பு மோதல்: பெண்கள் உள்பட 6 போ் காயம்

செய்யாறு: பெரணமல்லூா் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். பெரணமல்லூரை அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெங்கடேசன் (32), ஏழுமலை (... மேலும் பார்க்க

செஞ்சி அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா். புதுச்சேரியில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்து 23 பயணிகளுடன... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: பசுமை சாம்பியன் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரைமேடு, கூ.கள்ளக்குறிச்சியில் மின் மாற்றிகள் இயக்கம் தொடங்கிவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கரைமேடு பகுதியில் 22 கி.வோ. திறன் கொண்ட புதிய மின் மாற்றியின் இயக்கத்தை இரா.லட்சுமணன் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் முன்னாள் ... மேலும் பார்க்க

வட்டார வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் கூடுதலாக வட்டார வள பயிற்றுநா் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க