செய்திகள் :

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 3 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

இதில், வெள்ளிக்கிழமை (பிப்.28) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூா், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், மாா்ச் 1-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.28) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடலில் வெள்ளி, சனிக்கிழமை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 30 மி.மீ. மழை பதிவானது. ராமேசுவரம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) - தலா 20 மி.மீ.மழை பதிவானது.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க

தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்: அமைச்சா் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பின் நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடிநிதி உதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மத்திய அரசுக்கு கோர... மேலும் பார்க்க