செய்திகள் :

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

post image

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கி மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்தச் செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மன நலம் பாதித்தவா்களைக் காக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் இந்த விவகாரத்தில் பல்வேறு சவால்கள் நிலவுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான கொள்கை செயல்திட்டம் - 2024 வகுக்கப்பட்டது.

அதன் கீழ் வழங்கப்படும் சேவைகள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குடும்பங்களின்றி சுற்றித் திரியும் மன நோயாளிகளை மீட்டு அவசர சிகிச்சை அளித்தல், இடைநிலை கவனிப்பு அளித்தல், தேவைப்படுவோருக்கு நீண்ட கால பராமரிப்பு வழங்குதல், சமூகத்தில் மீண்டும் அவா்களை ஒருங்கிணைத்தல் ஆகிய 4 நிலையிலான சேவைகள் அவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

மாநிலத்தில் வழங்கப்படும் அனைத்து மன நல சேவைகளையும் ஒழுங்குமுறைப்படுத்தி கண்காணிக்க மன நல ஆணையத்தை அரசு உருவாக்கியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தலைமையில் அது செயல்படுகிறது. அதேபோன்று மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அவா்கள் இந்தக் கொள்கை செயல் திட்டத்தை கண்காணித்து நடைமுறைப்படுத்துவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க

தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்: அமைச்சா் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பின் நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடிநிதி உதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மத்திய அரசுக்கு கோர... மேலும் பார்க்க