செய்திகள் :

இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

post image

தேசிய தலைநகரில் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு காற்று, இடியுடன்கூடிய மிதமான மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, இரு தினங்களாக தில்லியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

செவ்வாய்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 6.9 டிகிரி குறைந்து 33.1 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.3 டிகிரி குறைந்து 24.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. மாலை 5.30 மணி அளவில் ஈரப்பதம் 50 சதவீதமாக பதிவாகியிருந்தது.

புதன்கிழமை நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 டிகிரி செல்சியஸ் மற்றும் 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

மே மாதத்தில் தில்லியில் 186.4 மி.மீ. மழை பெய்தது, இது மே மாதத்தில் பதிவான அதிகபட்ச மழைக்காலமாகும். நிகழாண்டு மே மாதத்தில் பெய்த மழையானது, 2008 ஆம் ஆண்டு இதே மாதத்தில் பெய்த 165 மி.மீ. மழைப்பதிவு என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை தில்லியின் காற்று தரக் குறியீடு 143 புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தெரிவித்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, காற்றின் தரக்குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடையில் இருந்தால் ‘நல்லது’, 51 மற்றும் 100 இடையில் இருந்தால் ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 இடையே இருந்தால் ‘மிதமானது’, 201 மற்றும் 300 இடையே இருந்தால் ‘மோசம்’, 301 மற்றும் 400 இடையே இருந்தால் ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 மற்றும் 500 இடைப்பட்டதாக காற்றின் தரம் இருந்தால் ‘கடுமையானது’ என்று வகைப்படுத்தப்படுகிறது.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க