செய்திகள் :

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

post image

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.

மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.

1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

புதன்கிழமை காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.

சுமார் 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

கேஜரிவால், அதிஷி மீது வழக்கு: கால்காஜி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளரும், முதல்வருமான அதிஷி மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தில்லி போலீஸôர் செவ்வாயக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல், தில்லி மக்களுக்கு விஷம் கலந்த யமுனை நீரை ஹரியாணா அனுப்பி வருவதாக பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் கேஜரிவால் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஷாஹாபாத் காவல் நிலையத்தில் கேஜரிவால் மீது செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட உள்ளன.

ஈரோடு கிழக்கு: இன்று வாக்குப் பதிவு

ஈரோடு, பிப். 4: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு புதன்கிழமை (பிப். 5) நடைபெறுகிறது.

இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 31 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2023 இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளதாலும், பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாகப் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த 2023 இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகள் பெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் அதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை பிப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பிக்க பிப். 21 வரை அவகாசம்!

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் அளித்து மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது. முன்பு பிப். 11ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க