செய்திகள் :

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு!

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ’மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ், கோவையில் தொடங்கி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பயணத்தை நிறைவு செய்கிறார்.

ஜூலை 7 அம் தேதி கோவை புறநகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழா நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் நயினார் நாகேந்திரன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கு இபிஎஸ் செல்லும்போது அப்பகுதியின் பாஜக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினர் பிரசாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்கவுள்ளதால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க : உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!

BJP state president Nainar Nagendran has been invited to attend the inaugural ceremony of AIADMK General Secretary Edappadi Palaniswami's upcoming election campaign.

திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கசிவு, சிகரெட் சூடு!

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மருத்துவப் பரிசோதனை வெளியாகியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக... மேலும் பார்க்க

பிரசார இயக்கத்தில் காபி-லாம் தராங்களா.? - விடியோ அழைப்பில் முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தில் திருப்பூர் மாவட்டச் செயலர் ஒருவருடன் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசிய விடியோ வெளியாகியுள்ளது.திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணிய... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் 13 வயதான ரோகித் ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விவகாரம்: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இர... மேலும் பார்க்க

கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தவெக உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு பகுதியில் ஓட்டுநராகப் பணிபுர... மேலும் பார்க்க