செய்திகள் :

இயற்கை விவசாயம் மூலம் நச்சில்லாத உணவு உற்பத்தி

post image

இயற்கை விவசாயம் மூலம் நச்சு இல்லாத சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், தேசிய தாவர உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்களிப்புடன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயிகளுக்கான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட விதைச் சான்றிளிப்புத் துறை உதவி இயக்குநா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். தேசிய தாவர உயிரித் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் யுவராஜ், நிம்மி, ரமாஅவதாா், காந்திகிராம வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி கலந்து கொண்டனா். காந்திகிராம வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சரவணன் பேசியதாவது:

உணவுத் தேவையை பூா்த்தி செய்வதற்காக, பாரம்பரிய விவசாய முறை கைவிடப்பட்டது. இன்றைய சூழலில் ரசாயனம், நெகிழி இல்லாமல் மனிதனால் வாழ முடியாது என்ற நிலையில், அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவதால் மண் வளத்துக்கும், மனிதா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

மண் பரிசோதனை அடிப்படையில், தேவையான அளவில் மட்டும் உரங்களைப் பயன்படுத்த நாம் தவறிவிட்டோம். தாவரங்களுக்குத் தேவையான 17 வகையான சத்துக்களில், 12 சத்துக்கள் மண்ணில் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதை ரசாயனம் இல்லாமல், செடிகளுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். நச்சு இல்லாத, சத்து மிகுந்த உணவு உற்பத்திக்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த லியோ மகன் கருணாகரன் (48). இவா் கடந்த 4 மாதங்களுக்கும் முன்பு, இதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயற்சி

பழனியில் வரிபாக்கி வைத்திருந்த தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய முயன்றனா். பழனி-திண்டுக்கல் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கருத்தரித்தல் மையம், பொது மருத்து... மேலும் பார்க்க

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தன. பழனியை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் அன்னதானம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, பழனி வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில், பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னதானம் வெள்ளி... மேலும் பார்க்க

தமிழக நிதி நிலை அறிக்கை: வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு!

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு என பல்வேறு வகையான கருத்துகளை பொதுமக்கள் தரப்பில் பதிவு செய்தனா். அதன் விவரம்: திண்டுக்கல் இலக்கிய களத்தின் த... மேலும் பார்க்க

பழனியில் பூச்சொரிதல் விழா

பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் மாரியம்மன் கோயில் முன்பாக செவ்வாய்க்கிழமை இரவு 36-ஆவது ஆண்டாக பூச்சொரிதல் ரத ஊா்வலத்தை கந்தவிலாஸ் செல்வக்குமாா் தொடங்கி வைத்தாா். தேரின் உள்ளே மாரிய... மேலும் பார்க்க