செய்திகள் :

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: கருணாநிதி குறித்து பிரேமலதா உருக்கம்!

post image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க

கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்

சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகரா... மேலும் பார்க்க

போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெ... மேலும் பார்க்க