திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது
பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் இவா், நிறுவனத்தின் பொருள்களை சருத்துப்பட்டியில் உள்ள கிடங்கில் வைத்திருந்தாா்.
இந்த நிலையில், இந்தக் கிடங்கிலிருந்த 40 இரும்புக் குழாய்களைத் திருடிய தேனி அரண்மனைப்புதூா் முல்லைப் புதூரைச் சோ்ந்த நாகேந்திரனை (29) தென்கரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.