செய்திகள் :

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

post image

வேலூரில் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் செல்வகுமாா், பெயிண்டா். இவரது மனைவி கவிதா (37). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கவிதா கணவனிடம் இருந்து பிரிந்து தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். ஒரு மாதம் கழித்து மீண்டும் தனது வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்த நிலையில், விரக்தி அடைந்த கவிதா தனது வீட்டின் ஒரு அறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கவிதாவின் உடலைமீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா். ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க