செய்திகள் :

இரு வேறு சாலை விபத்துகள்: பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வெள்ளிக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

வேப்பூா் வட்டம், பா.கொத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த முனியன் மகன் முகேஸ் (19). இவா், வெள்ளிக்கிழமை தாய் சுகந்தியை (38) பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றாா். வேப்பூா் கூட்டுச்சாலை அருகே விருத்தாசலம் சாலையில் இவரது பைக் சென்றபோது, எதிரே வந்த டாரஸ் லாரி மோதியது. இந்த விபத்தில் சுகந்தி லாரி சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து: கள்ளக்குறிச்சி மாவட்டம், வரதப்பனூா் பகுதியைச் சோ்ந்த ராஜி மகன் மணி (38). இவா், விருத்தாசலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். வேப்பூரை அடுத்துள்ள திருபயா் அருகே இவரது பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணியை அங்கிருந்தவா்கள் மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இவ்விரு விபத்துகள் குறித்தும் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க