செய்திகள் :

இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டிய ராஜேஷ்!

post image

நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டியதாகத் தெரிவித்திருந்தார்.

நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உடல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ராஜேஷின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷ் பேசிய பழைய நேர்காணல்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி ஒரு நேர்காணலில், "மார்க்ஸிய புத்தகங்களைப் படித்துவிட்டு லண்டன் சென்றபோது காரல் மார்க்ஸின் கல்லறைக்குச் சென்றேன். அங்கிருந்து சென்னை திரும்பியதும், எனக்கான கல்லறையைக் கட்டினேன். முதலில் மார்பிள் வைத்து அதை உருவாக்கினோம்.

நீண்ட காலம் கழித்து அதில் பிளவு ஏற்பட்டதால் அதை இடித்துவிட்டு கிரனைட்டில் கட்டினேன். காரணம், மகனுக்கும் மகளுக்கும் எதற்கு சிரமம் கொடுக்க வேண்டும்? எனக்குப் பிடித்ததுபோல் சில பைபிள் வசனங்களுடன் என் கல்லறையைக் கட்டியிருக்கிறேன். இறந்தபின் எப்படி அமைய வேண்டும் என சொல்லவா முடியும்?” எனக் கூறியிருந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நடிகர் ராஜேஷ் - குணங்களும் குணச்சித்திரங்களும்!

வயது அடிப்படையில் 3 வகை திரைப்பட தணிக்கைச் சான்று: மத்திய அரசு

வயது அடிப்படையில் 3 வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் வழங்குவது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் உள்பட அனைவரும், குழந்தைகள் மட்டும் அல்லது ப... மேலும் பார்க்க

24 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் தனது பங்களிப்பை நிறைவு செய்தது இந்தியா. தென்கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: ஐசிசி தலைவா் ஜெய் ஷா பங்கேற்பு

ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஐசிசி தலைவா் ஜெய் ஷா கலந்து கொண்டாா். ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் பிரசித்தி பெற்ற சாம்ப... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் ஏலம்: ஈரான் வீரா் ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு வாங்கப்பட்டாா்

புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை வீரா்கள் ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ஈரான் வீரா் முகமதுரேஸா ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். மேலும் 3-... மேலும் பார்க்க

4-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா், ஆன்ட்ரீவா, பெகுலா

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா், மகளிா் பிரிவில் ஜெஸிக்கா பெகுலா, மிரா ஆன்ட்ரீவா முன்னேறினா்... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் சூர்யா - 45 படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடட்த்தை எட்டியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்த... மேலும் பார்க்க