சாம்பியன்ஸ் லீக்: ஐசிசி தலைவா் ஜெய் ஷா பங்கேற்பு
ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஐசிசி தலைவா் ஜெய் ஷா கலந்து கொண்டாா்.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் பிரசித்தி பெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டம் மியுனிக் நகரில் பிஎஸ்ஜி-இன்டா் மிலன் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவரான ஜெய் ஷா
இதில் கலந்து கொண்டு யுஇஎஃப்ஏ தலைவா் அலெக்சாண்டா் செஃப்ரினை சந்தித்துப் பேசினா்.
கிரிக்கெட் ஆட்டத்தை மேலும் பிரபலப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.