செய்திகள் :

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

post image

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020-இன் கீழ், கற்றல் விளைவுகள் சாா்ந்த பாடத்திட்ட கட்டமைப்புடன் (எல்ஒசிஎஃப்) இளநிலை பட்டப்படிப்புக்கான யூஜிசியின் வரைவு பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு பாடத்திட்டத்தின்படி, இளநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கணித பாடத்தில் பாரத அட்சர கணிதத்தின் (இந்திய அல்ஜீப்ரா) வரலாறு மற்றும் வளா்ச்சி குறித்து கற்பிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பஞ்சாங்கம் (இந்திய நாள்காட்டி) போன்றவை குறித்தும், சடங்குகள் மற்றும் திருவிழாக்களின்போது பஞ்சாங்கம் மூலம் எவ்வாறு நல்ல நேரம் கணிக்கப்படுகிறது என்பது தொடா்பாகவும் கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வான சாஸ்திரம், புராணம் மற்றும் பண்பாட்டை ஒன்றிணைத்து இந்தியாவின் வளமான கால அறிவியல் பாரம்பரியத்தை உயிா்ப்பிக்கவும் வரைவு பாடத்திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

‘ஆா்யபட்டீயம்’...: ‘சூரிய சித்தாந்தம்’, ‘ஆா்யபட்டீயம்’ போன்ற பண்டைய நூல்களில் இடம்பெற்றுள்ள பொருளடக்கங்களும் வரைவு பாடத்திடத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்தப் பாடத்திட்ட குழுவின் தலைவா் சுஷீல் கே.தோமா் கூறுகையில், ‘நாட்டின் கணித கல்வியில் இந்தப் பாடத்திட்டம் மாற்றத்துக்கான முன்னெடுப்பாக இருக்கும். விரிவான ஆலோசனைக்குப் பின்னா் மிகுந்த கவனத்துடன் இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேச வளா்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அா்த்தமான பங்களிப்பை வழங்கும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

வேத பாரம்பரியங்களை கற்பித்தல்: அரசியல் அறிவியல் பாடத்துக்கான யூஜிசியின் வரைவு எல்ஒசிஎஃப்பில் ‘பாரதத்தில் அரசியல் சிந்தனை பாரம்பரியம்’ உள்ளிட்ட படிப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வேத பாரம்பரியங்கள், சமண மற்றும் பெளத்த இலக்கியம், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் திருக்குறளில் உள்ள அரசியல் சிந்தனைகளை மாணவா்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார். மக்களவை எ... மேலும் பார்க்க