செய்திகள் :

இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப்பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப்பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட இரண்டு சமூகப் பணி உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இப் பதவி அரசுப் பணி அல்ல. விண்ணப்பதாரா் குழந்தைகள் தொடா்பான உடல்நலன், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் (அல்லது)

குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் செய்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறைசாா்ந்த இணையதள முகவரியிலிருந்து (ட்ற்ற்ல்://க்ள்க்ஸ்ரீண்ல்ண்ம்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) விண்ணப்பத்தாரா் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபா்கள் மேற்கண்ட பதவிக்குரிய படிவத்தை ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம், நெடுஞ்சாலை, சென்னை 600 010 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என்றாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூ... மேலும் பார்க்க

கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு கப்பல் கட்டும் தளம் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம். இது முதன்மையாக இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், தேனி, உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக... மேலும் பார்க்க

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

காரைக்குடியில் செயல்பட்டுவரும் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.PS-04/2025பணி: Project Associ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.: HPBP/FTA/01/2025பணி: Quality E... மேலும் பார்க்க