செய்திகள் :

இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாய்ந்த ஈரானின் ஏவுகணைகள்! போர் துவக்கம்?

post image

இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு, அந்நாட்டின் முக்கிய நகரங்களின் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் நேற்று (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் போர் விமானங்கள் மற்றும் ஈரான் நாட்டுக்குள் முன்னதாகவே கடத்தப்பட்ட ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம், நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் தூதர் கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் 72 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முன்பாகவே நடத்தப்படுவது அவசியம் என அவர்களது தாக்குதல் குறித்து இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அமெரிக்க அரசு மற்றும் முக்கிய நிபுணர்கள் ஆகியோர் ஈரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் பதிலடி

இஸ்ரேலின் இந்தக் குற்றங்களிலிருந்து அவர்கள் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி, நேற்று (ஜூன் 13) வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் பல பகுதிகளின் மீது ஈரான் நேற்று (ஜூன் 13) நள்ளிரவு முதல் இன்று (ஜூன் 14) அதிகாலை வரை ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

இதில், இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ரிஷான் லெசியன் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான விடியோக்களில், ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலின் கட்டடங்கள் இடிந்துள்ளதும், அங்குள்ள வாகனங்கள் சேதமாகியுள்ளதும் பதிவாகியுள்ளது.

அந்நாட்டு தலைநகர் டெல் அவிவில், 34 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் சரிந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களின்போது, அமெரிக்காவின் நிலம் சார்ந்த வான்வழித் தற்காப்பு அமைப்புகள், அப்பகுதிகளில் தாக்க வரும் ஈரானின் ஏவுகணைகளைத் தகர்க்க இஸ்ரேலுக்கு உதவியுள்ளன.

கொண்டாட்டத்தில் மக்கள்!

இஸ்ரேலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களை, ஈரான் நாட்டு மக்கள் இனிப்புகள் வழங்கி ஆராவாரத்துடன் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஈரான் ராணுவம் அதன் எக்ஸ் தளப் பதிவில், தாக்குதல்களுக்கு இடையில் அந்நாட்டு மக்கள் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபடும் விடியோக்களையும் பகிர்ந்துள்ளது.

மற்றொரு விடியோவில், இஸ்ரேலை தாக்குவதற்காக ஈரான் ஏவிய ஏவுகணைகள் இராக் வான்வழியாகக் கடக்கும்போது, அந்நாட்டு மக்கள் ஆராவாரத்துடன் கூச்சலிடுவதும் பதிவாகியுள்ளது.

அணுசக்தி பேச்சுவார்த்தை கைவிடப்படுகிறதா?

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முடக்கக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்காக, இருநாட்டு அதிகாரிகளும் ஓமனில் வரும் ஜூன் 15 ஆம் தேதியன்று சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பின்னர் அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் எந்தவொரு அர்த்தமுமில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் கைவிடப்படுகிறதா என்று இதுவரை தெளிவாகவில்லை.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதிகளா? இஸ்ரேலின் தவறால் என்ன நடந்தது?

ஈரான் மீது முழு பலமும் செலுத்தப்படும்! டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் மூலம் உக்ரைன் போரை ரஷியா திசை திருப்ப முயற்சி?

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த ரஷியாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாதிமீர் புதின் மத்தியஸ்தத்துக்கு மறுத்து வருகிறார்.இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதன் மூலம், ரஷியா - உக்ரைன் போரிலிருந்த... மேலும் பார்க்க

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில்... மேலும் பார்க்க

நைஜீரியா: மர்ம நபர்களின் கொடூரத் தாக்குதலில் 100 பேர் பலி!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களின் தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெனுவே மாகாணத்தில் யெலேவடா கிராமத்தில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக த... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா் சனிக்கிழமை தெரிவித்தாா். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத்... மேலும் பார்க்க

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்... மேலும் பார்க்க