செய்திகள் :

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்! ஹவுதிகள் பொறுப்பேற்பு!

post image

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

டெல் அவிவ் நகரத்திலுள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இன்று (ஜூலை 10) தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஹவுதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொடர்பாளர் யஹியா சரீயா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஹவுதி படையின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொலைக்காட்சியின் மூலம் அறிவித்த அவர், அந்த தாக்குதல் அதன் இலக்கை அடைந்ததாகக் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலானது, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளுக்கு பதிலடி என்று கூறிய அவர், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, நிவாரணப் பொருள்களின் முடக்கம் தளரும் வரை, செங்கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீதான தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல் அவிவிலுள்ள விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டிலிருந்த நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை முறியடித்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜூலை 10) காலை கூறியிருந்தது.

இதேபோல், கடந்த ஜூலை 6 ஆம் தேதி பென் குரியன் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கும், யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Yemen's Houthi rebels have claimed responsibility for a missile attack on the international airport in the Israeli capital, Tel Aviv.

இதையும் படிக்க: பாகிஸ்தான் அதிபர் பதவி விலகல்? உள்துறை அமைச்சர் விளக்கம்!

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்... மேலும் பார்க்க

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க