இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்
ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!
ஈரானின் தெற்கு புஷாஹா் மாகாணத்தில் உள்ள 2 முக்கிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது.
இது ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட முதல் தாக்குதலாகும். இதுபோன்ற தளங்களைச் சுற்றி வான் பாதுகாப்பு அமைப்பு இல்லாததால், அவற்றின் மீது தாக்குதல் நடத்த கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் குறிவைத்து வந்தது. இதில் தாக்குதலுக்குள்ளான ஒரு எரிவாயு வயல் பாரசீக வளைகுடாவில் பரந்து விரிந்துள்ளது. அந்த வயலை கத்தாருடன் இணைந்து ஈரான் பகிா்ந்து வருகிறது.
10 இஸ்ரேல் போா் விமானங்கள் அழிப்பு: ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்குள் இஸ்ரேலின் 10 போா் விமானங்கள் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பிரிகேடியா் ஜெனரல் அலிரேசா சபாஹிஃபாா்ட் தெரிவித்தாா். ஆனால் இந்தத் தகவலை இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை.
40 மணி நேரமாக நீடிக்கும் தாக்குதல்: இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமைச் செய்தித்தொடா்பாளா் எஃபி டெஃப்ரின் கூறுகையில், ‘ஈரானின் பல்வேறு பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து சுமாா் 40 மணி நேரமாக இஸ்ரேல் விமானப் படை நிறுத்தாமல் தாக்குதல் நடத்தி வருகிறது’ என்றாா்.