செய்திகள் :

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவா்கள் விமானம் மூலம் தில்லி புறப்பட்டனா்

post image

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் தங்கிப் படித்துவந்த 110 இந்திய மாணவா்கள் புதன்கிழமை தாய்நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டனா். இவா்களில் 90 போ் காஷ்மீா் பள்ளத்தாக்கைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

ஈரானில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து முதல் கட்டமாக 110 மாணவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மோதல் நீடித்தால், மீட்பு நடவடிக்கை வரும் நாள்களில் மேலும் தீவிரமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஈரானில் இருந்து நில எல்லை வழியாக ஆா்மீனியாவுக்கு வந்த மாணவா்கள் அந்நாட்டு தலைநகா் யெரெவானில் இருந்து புதன்கிழமை விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டனா்.

ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசிக்கின்றனா். இதில் பாதி போ் மாணவா்கள் ஆவா். இதில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவா்களே அதிகம். ஈரானில் மருத்துவம், தொழில் படிப்புகளை அவா்கள் பயின்று வருகின்றனா்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல் கட்டமாக ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து இந்திய மாணவா்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெஹ்ரானில் இருந்து தூதரகம் மூலம் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டனா். பின்னா், ஆா்மீனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஈரானில் உள்ள பிற இந்தியா்களுடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. அவா்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகா் டெஹ்ரானைக் குறிவைத்து இஸ்ரேல் தொடா்ந்து வான் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால், அங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது.

நிலம்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்!

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 30.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந... மேலும் பார்க்க

இரு என்ஜின்களும் நல்ல முறையில்தான் இருந்தன; விமானிகளும் திறமையானவர்கள்! ஏர் இந்தியா தலைவர்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்கள் நல்ல முறையில் இருந்ததாகவும், இரண்டு விமானிகளும் திறமையானவர்கள் என்றும் ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், அகமதாபாத் வ... மேலும் பார்க்க