செய்திகள் :

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக..! - டிரம்ப் எச்சரிக்கை

post image

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல் 4-வது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. இரு நாடுகளும் தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

இந்த நிலையில், கனடாவில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருநாள் முன்னதாக புறப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிக்கை தெரிவித்திருக்கிறது.

மேலும், அவர், “சில முக்கிய காரணங்களுக்கான நான் திரும்பி வரவேண்டும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் டிரம்ப் ஒருநாள் முன்னதாக புறப்படுவதை, அவரின் பத்திரிகை செயலாளர் கரோலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உறுதிபடுத்தியிருக்கிறார்.

இதற்கிடையே ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளப் பதிவில், “நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்தியிருக்க வேண்டும்.

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது வெட்கக் கேடானது. இதனால், மனித வாழ்க்கைதான் வீணாகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனே டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை

ஜூலை 5ஆம் தேதி காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்கா கணிப்பு

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கி கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் ரையோ தத்சுகி என்பவர், தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். கல... மேலும் பார்க்க

எத்தியோப்பியா தலைநகர் - ஹைதராபாத் விமான சேவை துவக்கம்!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா மற்றும் தெலங்கானாவின் ஹைதரபாத் ஆகிய இருநகரங்களுக்கு இடையில் சர்வதேச விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்திலுள்ள ராஜிவ் காந்தி பன்னாட்டு விமான ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொலை?

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப... மேலும் பார்க்க

இஸ்ரேலின் உளவு அமைப்பு தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் - ஈரான் சண்டை ஐந்தாவது நாளை எட்டியிருக்கும் நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேலிய ஊடகம் வெளி... மேலும் பார்க்க

தெஹ்ரானிலிருந்து அர்மேனியா வந்த 110 இந்திய மாணவர்கள்! தூதரகம் நடவடிக்கை!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், தெஹ்ரானிலிருந்து இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளியேறியதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயம் என்ற பெய... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! துபை அரசு

கோடை காலத்தையொட்டி, துபை அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாளாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், வேலை நேரத்தையும் குறைத்து துபை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்தாண்டு கோடை... மேலும் பார்க்க