செய்திகள் :

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்றம்!

post image

ஈரான் மீதான அமெரிக்காவின் வான்வெளித் தாக்குதலால், உலகப் போர் ஆரம்பமாகி விட்டதாக உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வருகிறது. இந்தப் போரில், இஸ்ரேலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மேலும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்காவும், தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் (Truth Social), ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். எங்களின் அனைத்து விமானங்களும் இப்போது ஈரான் வான்வெளியைவிட்டு வெளியேறி விட்டன.

எங்களின் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கே திரும்பி விட்டன. அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். தாக்குதலின்போது கவனம் செலுத்திய வீரர்களுக்கு நன்றி. உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்ததில்லை.

இது அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி, உலகுக்கும் ஒரு வரலாற்றுத் தருணம். ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். இது அமைதிக்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால், தற்போது ரஷியா உள்பட ஈரான் ஆதரவு நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் போரில் ஈடுபட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், உலக நாடுகளிடையே போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், இந்தத் தாக்குதல் குறித்து, மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று பேசவுள்ளார்.

இதையும் படிக்க:இஸ்ரேல் - ஈரான் போா்: ரஷியாவுக்கு பலனா? பாதகமா?

முன்பே வெளியேறிவிட்டோம்: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான்!

அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வர... மேலும் பார்க்க

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கத்தரினாவில் 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹாட் பலூன் சன... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்த... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பதற்றம்! அமெரிக்காவுக்கு பிரிட்டன் ஆதரவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஈரானுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில... மேலும் பார்க்க