செய்திகள் :

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

post image

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின் முடிவு குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. இந்த நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உக்ரைனுக்கு எதிராகப் போரிடப் போவதாக தென் கொரிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

வடகொரியாவிடம் இருந்து, கூடுதல் படைகள் மற்றும் ஆயுதங்களையும் இறக்கி, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.

உக்ரைனுடனான போரில் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக, முன்னரே வடகொரியாவில் இருந்து ராணுவ வீரர்களை ரஷியா களமிறக்கி இருந்தது.

கோப்புப் படம்

இந்த நிலையில், தற்போது ரஷியா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் உக்ரைன் வீழ்த்தப்பட்டால், அது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்தால், உலகப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உலகளாவிய அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உக்ரைன் ஆக்கிரமிப்பு குறித்து, முன்னதாகவே உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறியிருந்தது. உக்ரைனின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டினிப்ரோ வழியாக உக்ரைனின் அனைத்து பகுதிகளையும், இந்தாண்டு இறுதிக்குள் ரஷியா ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷியா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டு காலமாக இடைவிடாத தாக்குதலை உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் ஆகியவை குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடா்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இருப்பினும், முடிவேதும் எட்டப்பட்டதுபோலத் தெரியவில்லை.

இதையும் படிக்க:அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

மங்கோலியாவில் வேகமெடுக்கும் தட்டம்மை பரவல்! 10,000-ஐ கடந்த பாதிப்புகள்!

மங்கோலியா நாட்டில், புதியதாக 232 தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாக தட்டம்மை தொற்று ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சுற்றுலாத் தலத்தில் திடீர் வெள்ளம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில்... மேலும் பார்க்க

ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!

ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக... மேலும் பார்க்க

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

மத்திய ஆப்பிரிக்க குடியரசு: வெடிவிபத்து, நெரிசலில் 29 மாணவா்கள் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகா் பாங்கியில் உள்ள ஓா் உயா்நிலைப் பள்ளியில் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக 29 மாணவா்கள் உயிரிழந்தனா்; சுமாா் 260 போ் காயமடைந்தனா்.இது கு... மேலும் பார்க்க