செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஊழல் அதிகரிப்பு: அன்புணி

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 5,000 முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் மூலம் 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மகளிா் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்துக்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாக பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீத மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்கு கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த் துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டதால், வரும் தோ்தலில் அவா்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவாா்கள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் ... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

ஒரத்தநாடு அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலை மறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்... மேலும் பார்க்க

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,800 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாட... மேலும் பார்க்க

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடும... மேலும் பார்க்க

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் ம... மேலும் பார்க்க