கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
உங்க அன்ப தொல்லைன்னு நினைச்சுட்டேன்! - அம்மாவின் இழப்பு உணர்த்திய பாடம் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்புள்ள அம்மாவுக்கு...
மகன் எழுதிக் கொள்வது...
அம்மா... அன்பும் பாசமும் அள்ளி தந்த நீங்க என்ன எங்கையுமே விட்டு கொடுத்தது இல்ல..
ஏ மகே.. ஏ மகே... அப்படினு பெரும பேசி தான் பார்த்து இருக்கே.. எனக்காக அப்பாட்ட எவ்வளோ சண்ட போட்டு இருக்கீங்க. தலைல எண்ண வச்சு தலவாரி என்ன பள்ளி கூடத்துல விட்டுட்டு செவத்தோரமா நீங்க அழுத அழுக இன்னு ஏ கண்ணோரத்துல தெரிஞ்சு கிட்டே இருக்கு. முதுகல பட்ட படிப்புக்கு சென்னைக்கு போரேனு சொன்ன அப்போ அவ்வளோ ஏங்கி இருப்பீங்க.
வீட்ட விட்டு வெளியவே போகவிடாம கைக்குள்ளயே வளத்த உங்கப் புள்ள திடீர்னு வந்து சென்னைக்கு போரேனு சொன்னா அப்போ எப்படி பித்து பிடிச்ச மாறி இருந்து இருப்பீங்க. என்னமோ ஏ மனசுதா கல்லாயிறுச்சுனு நெனைக்கிறே.

உங்களோட அன்ப புருஞ்சுக்காம தொல்லனு நெனச்சு 2 வருசோ உங்க எல்ல தாண்டி போய்ட்டே. ஒவ்வொரு நாளு உங்க கிட்ட ஒரு, ஒரு நிமிசோ பேசி இருப்பேனா. ஒரு நிமிசந்தா பேசி இருப்பே அதுக்கு நீங்க எனக்கு கொடுத்த அழைப்புதா சாட்சி.. அம்மா.. உங்கள பிரிஞ்சு நா கஷ்டப்பட்டேனோ இல்லயோ நீங்க கஷ்டப்பட்டு இருப்பீங்க.. வீட்டுல நா தா முதல் பட்டதாரி உனக்கு பட்டோ எப்ப தருவாங்க அத வாங்கி வீட்டுல மாட்டனும் னு சொல்லுவீங்க..
2 வருசத்துல ஒரு நாலு தடவையாவது வந்து உங்கள பாத்து இருப்பேனா... அது இல்லயே.. 2 வருசோ படிப்ப முடிச்சுட்டு 2025 மே கடைசி வாரத்துல வீட்டுக்கு வந்தே வந்த ஒடனே முனைவர் பட்ட படிப்புக்கு கேரளா போரேனு சொன்னே. நீங்க எங்கிட்ட பல தடவ கேட்ட அதே வார்த்தைய திரும்ப கேட்டீங்க.. எங்க கூட இருக்குறது உனக்கு பிடிக்கலையானு.. உங்க தொல்ல தாங்காமதா நா சென்னைக்கே போனேனு வாய் கூசாம நானு சொன்னே...
அம்மா 2025 ஜூன் 2 உங்கள கூட்டிக்கிட்டு வெளிய போனே ஏ வாழ்க்கையில மறக்கவே முடியாத நாளா மாறிருச்சு.. உங்கள விட்டு நா 2 வருசோ பிராஞ்சி இருந்தே.. ஆனா நீங்க என்ன விட்டு வாழ்க்க பூரா பிரிஞ்சிட்டீங்க..
கூட இருக்குற அப்போ அன்புனா என்னானு தெரியாதுனு சொல்லுவாங்க. கூட இல்லாத அப்ப அன்புக்காக ஏங்குவாங்க. இது தா மனித இயல்பு கூட.. அம்மா உங்கள நா சரியா கவனிச்சு இருந்த இப்போ நீங்க ஏ கூட இருந்து இருப்பீங்க.. உங்களுக்கு யார ரொம்ப பிடிக்கும்னு யாரு கேட்டாலு ஏ பையனதா பிடிக்கும்னு சொல்லுவீங்க.. நீங்க பெத்த மகன தம்பினு கூப்டு கூட பொறந்தவனாவு மாத்துவீங்க.

இப்பலா யாரு தம்பினு கூப்டாலு நின்னு திரும்பி பாத்துட்டுதா போரே.. அம்மா my world னு என் கை பேசில உங்க நம்பர பதிஞ்சு வச்சிருப்பே.. அது பெருமைக்குனு கிடையாது.. உங்க மேல இருக்குற பாசத்த எப்படி காட்டுறதுனு தெரியாம என் கை பேசி மெசேஜ் டோன் ல மம்மி ஐ லவ்யூ அப்படீங்குற டோன வச்சு இருப்பே.. ஆனா அன்ப எப்படி காட்டனு அப்படிங்கிற அறிவு வர அப்போ என்ன விட்டு போய்ட்டீங்க..
அம்மா மீண்டும் ஒருமுறை உன்னுடன் தெப்ப குளத்தை நடந்தே சுற்றி வர வேண்டும்.. மீண்டும் ஒருமுறை என்னுடன் கை கோர்த்து நடந்து வர வேண்டும். மீண்டும் ஒரு முறை தம்பினு அழைக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை எனக்காக அப்பாட்ட சண்ட போட வேண்டும். இது எல்லா நிறை வேறாத ஆசையா இருந்தாலு. உன்னுடன் இருந்த அந்த நாட்கள் மிக சிறியது. நீ இல்லா நாட்கள் மிக நெடிது (கொடிது).. அம்மா நா செஞ்ச எல்லாத்துக்கு என்ன மன்னிச்சுருங்க.. எவ்வளவு பெரிய காரியோ செஞ்சாலு நீங்க மன்னிப்ப எதிர்பாக்க மாட்டீங்க.. ஆனா இப்போ எனக்கு உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு அழுகனும் போல இருக்கு அம்மா.. ஏ மன்னிப்ப ஏத்துபீங்களா....
இப்படிக்கு தங்களின் அன்பு மகன் ஜாஹீர் உசேன்.