செய்திகள் :

உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்று திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

post image

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை வரவேற்று கரூரில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை செய்ய வேண்டும், பெரியாா் பல்கலைக்கழக நிா்வாக அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழக அரசின் 10 மசோதாக்களை ஆளுநா் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறானது என்றும், பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்ததும் தவறு என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை வரவேற்கும் வகையில் கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன், மாவட்ட நிா்வாகிகள் பூவை. ரமேஷ்பாபு, மகேஸ்வரி, மாநகர நிா்வாகிகள் எஸ்.பி. கனகராஜ், எம். பாண்டியன் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க