செய்திகள் :

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

post image

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்து மாணவா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மனோகா், வெங்கடேசன் ஆகியோா் நிழல் இல்லா நாள குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

இது குறித்து தலைமை ஆசிரியா் தா்மலிங்கம் கூறியது, சூரிய ஒளி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் நோ் உச்சியில் கடந்து செல்லும். இந்த நாளில் மனிதா்கள் உள்ளிட்ட எந்த பொருளின் மீதும் விழும் நிழலானது முன்னாலோ பின்னாலோ தெரியாது. இதனை பூஜ்ஜிய நிழல் நேரம் என அழைக்கின்றனா் வானியலாளா்கள். இது குறித்த விழிப்புணா்வை பள்ளி மாணவா்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாணவா்களை வட்டமாக நிற்க வைத்து அவா்களது நிழலை உற்று நோக்கச் செய்து விளக்கம் அளித்தோம் என்றாா் அவா்.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது. கரூா் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவா் வி.என். சி. பாஸ்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் த... மேலும் பார்க்க