செய்திகள் :

`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். ஹரியானாவில் இருந்து தலைமை நீதிபதியாக தேர்வாகும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி பி.ஆர். கவாய் தனது பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பியுள்ளார். அதன் நகலை நீதிபதி சூர்யா காந்துக்கும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Surya Kant, BR Gavai
Surya Kant, BR Gavai

யார் இந்த Surya Kant?

நீதிபதி சூர்யா காந்த் 2027, பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் இருப்பார். அவர் குறித்த சில முக்கிய தகவல்கள்!

  1. ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பெத்தாவர் என்ற கிராமத்தில் 1962 பிப்ரவரி 10ம் தேதி பிறந்தவர் சூர்யா காந்த். அங்குள்ள அரசு கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், ரோஹ்தக் மாவட்டத்தில் 1984ம் ஆண்டு மகாரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். பின்னர் 2011ல் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் படித்தார்.

  2. 1984ம் ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கிய இவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்காக சண்டிகருக்கு குடிபெயர்ந்தார். 2000ஆம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஹரியானாவின் தலைமை வழக்கறிஞராக பணியமர்த்தப்பட்டார். இந்தப் பதவிக்கு மிகவும் இளம் வயதில் அமர்த்தப்பட்ட நபராக திகழ்ந்தார். 2001ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தத்தைப் பெற்றார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
  1. 2004ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) உறுப்பினராக இருந்தார். இந்திய சட்ட நிறுவனத்தின் பல குழுக்களில் பங்கு பெற்றிருந்தார்.

  2. 2018ம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019 மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

  3. உச்ச நீதிமன்றத்தில், டெல்லி கள்ளநிதி கொள்கை தொடர்பான அர்விந்த் கெஜ்ரிவால் vs CBI (2024) வழக்கில் இடம்பெற்றிருந்தார். இரு நீதிபதிகள் அமர்வு டெல்லி முதலமைச்சருக்கு பிணை வழங்கியது. இந்த வழக்கில் அவருடன் இருந்த நீதிபதி உஜ்ஜல் புயான் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தபோதும், CBI கெஜ்ரிவாலை கைது செய்தது சட்டப்பூர்வமானது மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார் சூர்யா காந்த்.

CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் - ஏன்?

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்தமுயன்ற வழக்கில், வழக்கறிஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவி... மேலும் பார்க்க

கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் - நடந்தது என்ன?

கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்... மேலும் பார்க்க

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை! - இடைக்கால உத்தரவில் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்தது என்ன?

தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், கிராமப்பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது பரபரப்ப... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தேர்தல்களில் 42% இட ஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தெலங்கானா மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம... மேலும் பார்க்க

டாஸ்மாக்: `என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிபிஐ கூட.!' ED-க்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்... மேலும் பார்க்க

`கோயில் சொத்துகள் பத்திரப் பதிவு' தமிழக அரசின் அரசாணைக்கு தடை! - உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.பதிவுத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையி... மேலும் பார்க்க