செய்திகள் :

`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். ஹரியானாவில் இருந்து தலைமை நீதிபதியாக தேர்வாகும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி பி.ஆர். கவாய் தனது பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பியுள்ளார். அதன் நகலை நீதிபதி சூர்யா காந்துக்கும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Surya Kant, BR Gavai
Surya Kant, BR Gavai

யார் இந்த Surya Kant?

நீதிபதி சூர்யா காந்த் 2027, பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் இருப்பார். அவர் குறித்த சில முக்கிய தகவல்கள்!

  1. ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பெத்தாவர் என்ற கிராமத்தில் 1962 பிப்ரவரி 10ம் தேதி பிறந்தவர் சூர்யா காந்த். அங்குள்ள அரசு கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், ரோஹ்தக் மாவட்டத்தில் 1984ம் ஆண்டு மகாரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். பின்னர் 2011ல் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் படித்தார்.

  2. 1984ம் ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கிய இவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்காக சண்டிகருக்கு குடிபெயர்ந்தார். 2000ஆம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஹரியானாவின் தலைமை வழக்கறிஞராக பணியமர்த்தப்பட்டார். இந்தப் பதவிக்கு மிகவும் இளம் வயதில் அமர்த்தப்பட்ட நபராக திகழ்ந்தார். 2001ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தத்தைப் பெற்றார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
  1. 2004ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) உறுப்பினராக இருந்தார். இந்திய சட்ட நிறுவனத்தின் பல குழுக்களில் பங்கு பெற்றிருந்தார்.

  2. 2018ம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019 மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

  3. உச்ச நீதிமன்றத்தில், டெல்லி கள்ளநிதி கொள்கை தொடர்பான அர்விந்த் கெஜ்ரிவால் vs CBI (2024) வழக்கில் இடம்பெற்றிருந்தார். இரு நீதிபதிகள் அமர்வு டெல்லி முதலமைச்சருக்கு பிணை வழங்கியது. இந்த வழக்கில் அவருடன் இருந்த நீதிபதி உஜ்ஜல் புயான் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தபோதும், CBI கெஜ்ரிவாலை கைது செய்தது சட்டப்பூர்வமானது மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார் சூர்யா காந்த்.

`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக... மேலும் பார்க்க

``கோமாவில் இறந்தவர், பாலிசி காலாவதியை ஏற்க முடியாது'' - மனைவிக்கு ரூ.1 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்... மேலும் பார்க்க

2-வது திருமணத்தை பதிவுசெய்ய முதல் மனைவி சம்மதம் வேண்டும்; கேரள ஐகோர்ட் கூறிய தீர்ப்பு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (44). 2017-ம் ஆண்டு காசர்கோட்டைச் சேர்ந்த ஆபிதா (38) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நில... மேலும் பார்க்க

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறையின் நடவடிக்கை சரியானதுதான் - PMLA உத்தரவு

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கியது சரியானதுதான் என்று 'பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (PMLA) உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. அம... மேலும் பார்க்க

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? விவரம் கேட்கும் உயர்நீதிமன்றம்

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுத்தரப்பில் விவரம் கேட்டுள்ளது .இந்து சமய அறநிலையத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ச... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து, `சதுப... மேலும் பார்க்க