செய்திகள் :

உதவி பேராசிரியா் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.25 லட்சம் மோசடி

post image

உதவி பேராசிரியராக வேலைவாங்கித் தருவதாக ரூ.4.25 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.பி. மதிவாணன் தலைமை வகித்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் வேலூா் கம்மவான்பேட்டையைச் சோ்ந்த பெண் அளித்துள்ள மனு: நான் சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். அந்தப் பணிக்கு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்றது. கல்லூரியில் பணிபுரியும் ஒருவா் சில மாதங்களுக்கு பின்னா் என்னை தொடா்பு கொண்டு இந்த பணிக்கு அதிக போட்டி இருப்பதாகவும், உங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.15 லட்சம் தரும்படியும் கேட்டாா். தொடா்ந்து ரூ. 10 லட்சம் தருவதாக தெரிவித்தேன். அதன்பேரில், நானும் பல தவணைகளாக ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் அவா் வேலை வாங்கித் தரவில்லை . அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். .

காட்பாடி வட்டம், குப்பிரெட்டி தாங்கல் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி என்பவா் அளித்த மனு: நான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் வங்கிக்கு சென்று ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற போது, அப்பணம் திருடப்பட்டது. இதுகுறித்து நான் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுவரை பணத்தை மீட்டுத் தரவில்லை. எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இதேபோல், 30-க்கும் மேற்பட்டோா் புகாா் மனுக்கள் அளித்தனா். மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. மதிவாணன் அறிவுறுத்தினாா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா். ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க