செய்திகள் :

உத்தரப்பிரதேசம்: "இரவானால் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்கிறார்" - வைரலான கணவனின் புகார்

post image

உத்தரப்பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட நீதிபதியிடம் கொடுத்திருக்கும் புகார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள லோத்ஷா என்ற கிராமத்தில் வசிக்கும் மீரஜ் என்பவர் தன் மனைவி நசீமுன் மீதுதான் நூதனமான புகாரைக் கொடுத்து இருக்கிறார்.

அவர் தன் மனைவி மீது கொடுத்துள்ள புகார் மனுவில், ''இரவு நேரத்தில் என் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்க வருகிறார். பல முறை என்னைக் கொலை செய்ய முயன்றார்.

மீரஜ்
மீரஜ்

ஆனால் ஒவ்வொரு முறையும் நான் உறங்கிக்கொண்டிருக்கும் போது என்னைக் கடிக்கும் முன்பு எழுந்துவிடுவேன். என் மனைவி என்னை மனரீதியாக துன்புறுத்துகிறார். நான் உறங்கிக்கொண்டிருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் என்னை என் மனைவி கொலை செய்யக்கூடும்'' என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி அது பற்றி விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். போலீஸார் நூதனமான இந்தப் புகார் குறித்து ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டனர். விசாரணையில் ஒரு நாள் இரவு பாம்பாக மாறி என்னை விரட்டி விரட்டி ஒருமுறை கடித்துவிட்டதாக மீரஜ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அவரது கதை இப்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

அவரது கதையைப் படித்த நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ஒருவர் காமெடியாக, 'நீங்கள் அவரது நாகமணியை மறைத்து வைத்திருப்பீர்கள்'என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், 'நீங்களும் பாம்பாக மாறிவிடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், 'திருமணத்திற்குப் பிறகு நீங்கள் நடிகை ஸ்ரீதேவியைப் பார்த்து இருக்கிறீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலி' என்று குறிப்பிட்டுள்ளார். 1986ம் ஆண்டு ஸ்ரீதேவி படம் ஒன்றில் பாம்பாக நடித்து இருந்தார்.

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்தால் 16 குழந்தைகள் மரணம்; தமிழக மருந்து கம்பெனிதான் காரணமா?

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவரை இரண்டு மாநிலத்திலும் சேர்த்து 16 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து இறந்துள்ளனர். அவர்க... மேலும் பார்க்க

பெங்களூரு: "உறவுக்கு மதிப்பு கொடுத்தேன்; ஆனால்" - திருமண ஆசையில் ரூ.2.3 கோடியை இழந்த 59 வயது ஆசிரியை

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதிய அளவுக்குப் பயனளிக்கவில்லை. திருமண ஆசை, பங்கு வர்த்தகம், டிஜிட்டல் கைது என்று எத... மேலும் பார்க்க

திண்டுக்கல்: "கொடுத்த பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்" - காங்கிரஸ் பிரமுகர் மீது பெண் புகார்

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், குழந்தைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 'பெரியகோட்ட... மேலும் பார்க்க

`நெஞ்சுவலி சார்' - போலீஸிடமிருந்து தப்பிச்சென்ற விசாரணை கைதி

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி சீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சங்கர் (25). இவர் திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சுபாஷ் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரின் அம்... மேலும் பார்க்க

``கட்சி பேதமின்றி சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் முதல்வர்'' - கரூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர... மேலும் பார்க்க

கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போலி சாமியார் கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெப்பக்குளம் தெருவில் உள்ள கருப்பசாமி கோயிலில் கடவூர் தாலுகா, கரிச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது: 38) என்பவர் பொது மக்களுக்கு குறி சொல்லி வேண்டுதல்களை நிறை... மேலும் பார்க்க