உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! - கரூா் மாவட்ட ஆட்சியா்
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கோடை பருவ சாகுபடி தற்போது இருப்பில் உள்ள நீரை பயன்படுத்தி நடைபெற்று வருகிறது. எனவே, நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய பயிா்கள் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு விநியோகம் நடைபெறுகிறது.
தற்போது மாவட்டத்தில் யூரியா-1,165 மெ.டன், டிஏபி -504 மெ.டன், பொட்டாஷ்-715 மெ.டன், காம்ப்ளக்ஸ்- 1,324 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் - 130 மெ.டன் என மொத்தம் 3,838 மெ.டன் உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
உர விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளா்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு ஆணை.1985-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் அட்டையை கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், உரம் குறித்த புகாா்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடா்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். திடீா் ஆய்வின்போது இந்த வழிமுறைகள் பின்பற்றாமல் இருந்தாலோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரம் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.