செய்திகள் :

சின்னதாராபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்! - செ.ஜோதிமணி எம்.பி. தகவல்

post image

சின்னதாராபுரத்தில் ரூ.3.6 கோடி மதிப்பில் விவசாயிகளுக்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட உள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது, கரூா் பகுதியில் தென்னை சாகுபடி விவசாயிகள் கொப்பரைத் தேங்காயை விற்க ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறாா்கள். இதனை தவிா்க்க சின்னதாராபுரத்தில் ரூ.3.6 கோடி மதிப்பில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைய உள்ளது.

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் ரூ.278.58 கோடி மதிப்பில் உயா்மட்டப் பாலங்கள் கட்டப்பட உள்ளன. மேலும் இதுவரை எம்பி தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 562 பேருக்கு ஆலிம்கோ நிறுவனம் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் கரூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரோடு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. மாநில அரசு நிலம் கொடுத்தால் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் கூறியிருக்கிறாா். எனவே விரைவில் மாநில அரசின் ஒப்புதலோடு கரூரில் விமான நிலையம் அமையும் என்றாா் அவா்.

பக்ரீத்: கரூரில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக... மேலும் பார்க்க

‘டிச.28-இல் மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு’

மதுரையில் டிச.28-ஆம்தேதி வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது என்றாா் ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம். கரூரில், ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு... மேலும் பார்க்க

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! - கரூா் மாவட்ட ஆட்சியா்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கோடை பருவ சாக... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஜக்கர நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (57)... மேலும் பார்க்க

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க