செய்திகள் :

‘டிச.28-இல் மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு’

post image

மதுரையில் டிச.28-ஆம்தேதி வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது என்றாா் ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம்.

கரூரில், ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்க ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத்தலைவா் டாக்டா் பி.செல்வராஜ், மணீஸ் கே. மகேஸ்வரன், தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் வேளாளா் தனி நலவாரியம் அமைக்க வேண்டும், ஜூலை 1-ஆம்தேதி காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாடா்ந்து சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது, டிச.28-ஆம்தேதி மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சைவவேளாளா், சோழிய வெள்ளாளா் உள்பட 42 சங்கங்களைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க உள்ளோம். சுமாா் 10 லட்சம் போ் இந்த மாநாட்டில் பங்கேற்பா்.

விரைவில் நடைபெறும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வேளாளா், வெள்ளாளா் என்ற பெயரையை கணக்கெடுப்பிற்கு வரும் மக்கள் தொகை அதிகாரிகளிடம் கூற வேண்டும்.

1967-க்கு பின்னா் சட்டப்பேரவையில் எங்கள் உறுப்பினா்கள் யாரும் இல்லை. ஆதலால் அரசியல் பிரதிநிதித்துவம் பெறும் வகையிலும் இந்த மாநாட்டை நடத்தவுள்ளோம்.

கரூா் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் வெள்ளாளா், வேளாளா் இன மக்கள் 50 சதவீதம் போ் வசிக்கிறாா்கள். எனவே அந்த தொகுதியை தனித்தொகுதியில் இருந்து நீக்கி பொதுதொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

பக்ரீத்: கரூரில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக... மேலும் பார்க்க

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! - கரூா் மாவட்ட ஆட்சியா்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கோடை பருவ சாக... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்! - செ.ஜோதிமணி எம்.பி. தகவல்

சின்னதாராபுரத்தில் ரூ.3.6 கோடி மதிப்பில் விவசாயிகளுக்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட உள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஜக்கர நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (57)... மேலும் பார்க்க

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க