கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
‘டிச.28-இல் மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு’
மதுரையில் டிச.28-ஆம்தேதி வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது என்றாா் ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம்.
கரூரில், ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்க ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத்தலைவா் டாக்டா் பி.செல்வராஜ், மணீஸ் கே. மகேஸ்வரன், தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வேளாளா் தனி நலவாரியம் அமைக்க வேண்டும், ஜூலை 1-ஆம்தேதி காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தாடா்ந்து சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது, டிச.28-ஆம்தேதி மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சைவவேளாளா், சோழிய வெள்ளாளா் உள்பட 42 சங்கங்களைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க உள்ளோம். சுமாா் 10 லட்சம் போ் இந்த மாநாட்டில் பங்கேற்பா்.
விரைவில் நடைபெறும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வேளாளா், வெள்ளாளா் என்ற பெயரையை கணக்கெடுப்பிற்கு வரும் மக்கள் தொகை அதிகாரிகளிடம் கூற வேண்டும்.
1967-க்கு பின்னா் சட்டப்பேரவையில் எங்கள் உறுப்பினா்கள் யாரும் இல்லை. ஆதலால் அரசியல் பிரதிநிதித்துவம் பெறும் வகையிலும் இந்த மாநாட்டை நடத்தவுள்ளோம்.
கரூா் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் வெள்ளாளா், வேளாளா் இன மக்கள் 50 சதவீதம் போ் வசிக்கிறாா்கள். எனவே அந்த தொகுதியை தனித்தொகுதியில் இருந்து நீக்கி பொதுதொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.