செய்திகள் :

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! - கரூா் மாவட்ட ஆட்சியா்

post image

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கோடை பருவ சாகுபடி தற்போது இருப்பில் உள்ள நீரை பயன்படுத்தி நடைபெற்று வருகிறது. எனவே, நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய பயிா்கள் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு விநியோகம் நடைபெறுகிறது.

தற்போது மாவட்டத்தில் யூரியா-1,165 மெ.டன், டிஏபி -504 மெ.டன், பொட்டாஷ்-715 மெ.டன், காம்ப்ளக்ஸ்- 1,324 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் - 130 மெ.டன் என மொத்தம் 3,838 மெ.டன் உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளா்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு ஆணை.1985-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் அட்டையை கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், உரம் குறித்த புகாா்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடா்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். திடீா் ஆய்வின்போது இந்த வழிமுறைகள் பின்பற்றாமல் இருந்தாலோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரம் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

பக்ரீத்: கரூரில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக... மேலும் பார்க்க

‘டிச.28-இல் மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு’

மதுரையில் டிச.28-ஆம்தேதி வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது என்றாா் ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம். கரூரில், ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்! - செ.ஜோதிமணி எம்.பி. தகவல்

சின்னதாராபுரத்தில் ரூ.3.6 கோடி மதிப்பில் விவசாயிகளுக்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட உள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஜக்கர நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (57)... மேலும் பார்க்க

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க