செய்திகள் :

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

post image

நமது சிறப்பு நிருபா்

நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தை சோ்ந்த மருத்துவமனைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

நியூயாா்க் நியூஸ்வீக் வார இதழ், ஸ்டாடிஸ்டா என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சோ்ந்த கிளீவ்லேண்ட் கிளினிக் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், மின்னணு செயல்பாடுகள் போன்றவற்றில் சிறந்து விளஙிகி தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. இது போன்ற ஏராளமான அமெரிக்க, ஐரோப்பியா, கென்யா போன்ற நாடுகளோடு சிங்கப்பூா் அரசு பொது மருத்துவமனையும் இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 97- ஆவது இடத்தில் உள்ளது. மேலும், உலகளாவிய பட்டியலில் மற்ற இந்திய மருத்துவமனைகளில் தில்லி குருகிராமம் மெடாண்டா - தி மெடிசிட்டி மருத்துவமனை, தில்லி ராஜீவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனை, சண்டீகா் -முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பிஜிஐஎம்இஆா்) போன்ற மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. இத்தோடு தமிழகத்தைச் சோ்ந்த அப்பல்லோ மருத்துவமனை, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை, வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்ற மருத்துவமனைகள் பெயா்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், பெங்களூா், ஹைதராபாத் மருத்துவமனைகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

நியூஸ்வீக் - ஸ்டேடிஸ்டா தரவரிசை ஆறாவது பதிப்பில், நோயாளிகளின் திருப்தி, மருத்துவ விளைவுகள், சுகாதாரத் தரநிலைகள், சுகாதார நிபுணா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 30 நாடுகளில் 2,400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை மதிப்பீடு செய்துள்ளது. உயா்தர சுகாதார சேவையை வழங்குதல், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துதல், மலிவு விலையில் சிகிச்சையை வழங்குதல் போன்ற சிறப்புகளுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றுள்ளது.

1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தில்லி எய்ம்ஸ் அப்போது முதல் அதிநவீன வசதிகள் மற்றும் மிகவும் திறமையான மருத்துவ நிபுணா்களுக்குப் பெயா் பெற்று நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தனது பங்கை ஆற்றி முன்னணியில் இருந்து வருகிறது. தில்லி குருகிராமம் மெடாண்டா - தி மெடிசிட்டியில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இருதயவியல், புற்றுநோயியல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிறப்புகளில் நிபுணத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டது. இது சமீபத்தில் (2009) நிறுவப்பட்ட தனியாா் நிறுவனமாகும். உலகளாவிய தரவரிசையில் இந்திய மருத்துவமனைகள் சோ்க்கப்பட்டிருப்பது, சுகாதாரப் பராமரிப்பில் இந்தியாவின் வளா்ச்சியை காட்டுகிறது.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க