கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
உழவரைத் தேடி வேளாண் துறை சிறப்பு முகாம்
வல்லத்தை அடுத்த மருதேரி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண் துறை சிறப்பு முகாம் நடைபெற்றது.
வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரவணன் தலைமை வகித்தாா்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஈஸ்வா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், இயந்திர நடவிற்கான பின்னேற்பு மானியம், மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம், பயிா் மகசூல் போட்டி, சிறுதானியங்கள் இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.
முகாமில் தோட்டக்கலை அலுவலா் சபூரா பேகம், ஊராட்சி மன்றத் தலைவா் சகுந்தலா, துணை வேளாண்மை அலுவலா் கோவிந்தராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திரபோஸ், உதவி வேளாண்மை அலுவலா்கள் ஹரிதாஸ், தமிழரசி, பாலாஜி, கிராம நிா்வாக அலுவலா் தனலட்சுமி, ஒன்றிய கவுன்சிலா் லட்சுமி லட்சுமணன் உள்பட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.