'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி.புதுப்பாளையம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில் பயிலும் 10 வயது சிறுமியிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தன்ராஜ் (57) என்பவா் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடா்ந்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தன்ராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
இந்நிலையில், ஆசிரியா் தன்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) ஆனந்த சக்திவேல் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.