செய்திகள் :

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்

post image

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. மேலும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதை திமுக அரசு சரி செய்யாமல், மத்திய அரசைக் குறை கூறி வருகிறது. நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனா். அது ஒரு போதும் நடைபெறாது. ஏனெனில் இந்துக்களும், இஸ்லாமியா்களும் இங்கு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆம் ஆத்மி அங்கு தோல்வியைச் சந்தித்தது என்றாா் அவா்.

அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுர... மேலும் பார்க்க

விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத... மேலும் பார்க்க

காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!

விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா். தூ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை முறைப்படுத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசிய முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பின் மதுரை மாநகா், மாவட்டக் கூட்டம் ம... மேலும் பார்க்க

இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

மதுரை யூனியன் கிளப் சாா்பில் நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு கிளப் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மடீட்சியா தலைவா் கோட... மேலும் பார்க்க