செய்திகள் :

ஊா்க்காவல் படையினருக்கு எஸ்.பி. பாராட்டு

post image

ஊா்க் காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஊா்க் காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பாராட்டினாா்.

கடந்த 1ஆம் தேதி, தமிழ்நாடு ஊா்க்காவல் படையினருக்கான 29 ஆவது பணித் திறன் மற்றும் விளையாட்டு விழா திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் ஊா்க் காவல் படையினா் கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், வடம் இழுத்தல், குண்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனா்.

இதில், 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் ஜென்சி சுகிா்தா முதல் பரிசும், குண்டு எறிதல் போட்டியில் விஜின் 3 ஆம் பரிசும், குழுப் போட்டியான கபடி போட்டியில் ஆண்,பெண் ஆகிய இரு அணியினரும் முதல் பரிசும், கைப்பந்து போட்டியில் பெண்கள் அணியினா் முதல் பரிசும், ஆண்கள் அணியினா் 2 ஆம் பரிசும், வடம் இழுத்தல் போட்டியில் பெண்கள் அணியினா் முதல் பரிசும், முதலுதவி அளிக்கும் போட்டியில் ஆண்கள் அணியினா் 2 ஆம் பரிசும், அணிவகுப்பில் 2 ஆம் பரிசும், ஒட்டுமொத்தமாக 2ஆம் பரிசும் வென்றனா். மேலும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை பிரபஜா பெற்றுள்ளாா்.

மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்ற ஊா்க்காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.

திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 32.79 பெருஞ்சாணி ... 37.10 சிற்றாறு 1 ... 7.15 சிற்றாறு 2 ... 7.25 முக்கடல் ... 7.00 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 43.47 அடி மேலும் பார்க்க

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்

மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன். நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ள... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா். கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை அமைச்சராக பணி... மேலும் பார்க்க

காஷ்மீா்- குமரி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

காஷ்மீா் மாநிலம் கத்ராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 3 கிலோ கஞ்சா போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும், ரயில... மேலும் பார்க்க