செய்திகள் :

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

post image

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஜனநாயகத்தில் பல்வேறு பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த சமயத்தில் நாட்டின் சிறப்பான எதிா்காலத்துக்கு தெளிவான திட்டங்களை ஆட்சியாளா்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், குறுகிய கால பிரச்னைகள் மற்றும் கஷ்டங்களால் திசைமாறி விடுவீா்கள். அந்த வகையில், இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது.

மூன்றாவது பதவிக் காலத்தில் அவா் துடிப்புடன் செயல்படுவது பாராட்டுக்குரியது.

பிரிட்டனில் டோனி பிளோ் மற்றும் மாா்கரெட் தாட்சருக்குப் பிறகு எந்தவொரு பிரதமரும் மூன்று முறை பிரதமராக தோ்ந்தெடுக்கப்படவில்லை. பிரதமா் மோடியை மக்கள் அங்கீகரித்திருப்பது பல்வேறு மாற்றங்கள் இந்தியாவில் தொடா்ந்து நிகழ்ந்து வருவதற்கான சான்றாகும் என்றாா்.

ஆதாரால் மக்களுக்குப் பயன்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞா் பால் ரோமா் பேசுகையில், ‘உலக அளவில் மிக முக்கிய தொழில்நுட்பமாக ஆதாா் உள்ளது. இது மக்களின் வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக பணம் செலுத்துவது உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஆதாருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் அதை வெற்றிகரமாக அரசு செயல்படுத்தியுள்ளது’ என்றாா்.

ரஷியா புறப்பட்டார் மோடி!

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.இந்த பயணமானது இந்தியா - ரஷியா இடையேயான உறவை மேலும் வலு... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்தால் ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெகுமதிமும்பையில்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கொலைக்கு பொறுப... மேலும் பார்க்க

பாஜகவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர் அமித் ஷா: பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60-ஆவது பிறந்தநாளை இன்று(அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க