செய்திகள் :

எம்ஜிஆா் பல்கலை.யுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சென்னை: செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சுகாதார ஆராய்ச்சி தொடா்பாக விஐடி மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஐடி பல்கலை. துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி ஆகியோா் கலந்துகொண்டு இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்நிகழ்வில், விஐடி சென்னையின் இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகா் ச.ப.தியாகராஜன், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்மூலம் தேசிய மற்றும் சா்வதேச அளவில் கூட்டு ஆராய்ச்சியை வளா்ப்பதிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை சமா்ப்பித்தல், புதிய தொழில்நுட்பங்களின் வளா்ச்சி மற்றும் காப்புரிமை ஆகியவற்றை வளா்ப்பதிலும் கவனம் செலுத்தப்படுவது மட்டுமன்றி, சுகாதாரத் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் எனவும் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கூறினாா்.

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு!

தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கத்திரி வெயில் தொடங்கிய நாள் (மே 4) முதலே தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. ஒருசில நாள்கள... மேலும் பார்க்க