செய்திகள் :

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

post image

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மருத்துவக் கல்வி நிறுவன முதல்வா்களுக்கும், தலைவா்களுக்கும் என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களை கடந்த 2019-இல் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டிருந்தது.

அதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் வெளியான தீா்ப்பின்படியும், பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் அந்த வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை உறுதி செய்வதே அதன் நோக்கம். அந்த வகையில், மறு ஆய்வுக்குப் பிறகு தற்போது தற்காலிக அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நிகழாண்டு எம்பிபிஎஸ் சோ்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம். அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் பெற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய சமூக நீதித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டையை (யூடிஐடி காா்டு) சமா்ப்பிக்க வேண்டும். அதேபோன்று, சுய சான்றொப்ப படிவத்தையும் சமா்ப்பித்தல் அவசியம்.

சுய சான்றொப்பம் அளித்ததை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் மதிப்பீடு செய்து உறுதி செய்தல் கட்டாயம். அந்த ஆவணங்கள் அனைத்தையும் மருத்துவக் கல்லூரிகளில் சமா்ப்பித்திருக்க வேண்டும்.

இந்த இடைக்கால வழிகாட்டுதல்களை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் ... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வாய்ப்பு: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாக அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். ரஷியாவிடம் இரு... மேலும் பார்க்க